குவைத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலை இன்று (ஆகஸ்ட் 1) விரிவுபடுத்தி DGCA அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குவைத் விமான நிலையம் இன்று முதல் வணிக விமானங்களின் நடவடிக்கைகளைத் தொடங்கிய நிலையில், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் 31 இடங்களுக்கு வணிக விமான போக்குவரத்து தடை விதிக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமானங்களுக்கான வழிமுறைகளை DGCA வெளியீடு..!!
தடைக்கு உட்பட்ட நாடுகள் பின்வருமாறு: இந்தியா, ஈரான், சீனா, பிரேசில், கொலம்பியா, ஆர்மீனியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சிரியா, ஸ்பெயின், சிங்கப்பூர், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, இலங்கை, நேபாளம், ஈராக், மெக்சிகோ, இந்தோனேசியா, சிலி , பாகிஸ்தான், எகிப்து, லெபனான், ஹாங்காங், இத்தாலி, வடக்கு மாசிடோனியா, மால்டோவா, பனாமா, பெரு, செர்பியா, மாண்டினீக்ரோ, டொமினிகன் குடியரசு மற்றும் கொசோவ் ஆகிய நாடுகளாகும்.
இதையும் படிங்க : குவைத்தில் PCR சோதனை நடத்த கூடுதல் ஆய்வகங்கள்..!!
முன்னதாக குவைத் ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தடை அறிவித்திருந்தது, இன்று அதிகாரிகள் மேலும் நாடுகளின் பட்டியலை அறிவித்துள்ளனர்.
பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தவிர, நாட்டிலுள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை குவைத்துக்குச் செல்லவும், வெளியேறவும் அமைச்சர்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக அரசு தொடர்பு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தில் குழந்தை விசாவை அம்மாவின் ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாற்றுவதற்கு தடை..!!
முன்னதாக குவைத்திற்குள் நுழைய 7 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுருந்த தகவல் குறித்து நம் பக்கத்தில் வந்த செய்தி : இந்தியா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குவைத் வருவதற்கு தடை..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms