குவைத்தில் தந்தை நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறிய சந்தர்ப்பங்களில் அல்லது அவர் நாட்டிற்கு வெளியே இருந்தபோது அவரது குடியிருப்பு விசா முடிந்துவிட்டால், அல்லது அவர் காலமாகியிருந்தால், குழந்தையின் குடியிருப்பு விசாவை அவர்களின் தாய்மார்களுக்கு மாற்றப்படாது என்று பொது குடியிருப்பு துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : இந்தியா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குவைத் வருவதற்கு தடை..!!
மேலும், இந்த முடிவு நாட்டில் உள்ள வெளிநாட்டினரின் குடியிருப்பை சரிசெய்யும் கட்டமைப்பிற்குள் வந்து வெளிநாட்டினரின் புள்ளிவிவரங்களை திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள ஆறு ஆளுநர்களில் (governorate) உள்ள குடியிருப்பு விவகாரத் துறைகளின் இயக்குநர்களுக்கு, குவைத்தில் வசிக்கும் தாய்மார்களின் நிதியுதவிக்கு குழந்தைகளின் குடியிருப்புகளை மாற்றுவது அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமானங்களுக்கான வழிமுறைகளை DGCA வெளியீடு..!!
இந்த முடிவிலிருந்து மூன்று பிரிவுகளுக்கு விதிவிலக்கு அழைக்கப்பட்டுள்ளது, அவை :
- குவைத் கல்வி அமைச்சகத்தில் பணிபுரியும் பெண் வெளிநாட்டு ஆசிரியர்கள்.
- சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ மற்றும் நர்சிங் அதிகாரசபையில் உள்ள வல்லுநர்கள்.
- குற்றவியல் சான்றுகள் பொதுத் துறையில் பணிபுரியும் பெண் மருத்துவர்கள்.
இந்த மூன்று பிரிவினர்களுக்கு மட்டும் இந்த முடிவிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்திற்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் ஆகஸ்ட் 2 அன்று பொறுப்பேற்பு..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms