குவைத்தில் விசா மீறலுக்கு வழங்கப்படும் சலுகை காலம் வரும் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் தாமர் அல் அலி அல் சபா தெரிவித்துள்ளார்.
முன்னர் சலுகை காலம் ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது, தற்போது இந்த முடிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Oxford/AstraZeneca தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த குவைத் ஒப்புதல்
இந்த முடிவு, பிப்ரவரி 1 முதல் மார்ச் 2 வரை நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் ட்வீட்டின் வழியாக தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் எல்லை நடவடிக்கைகள் காரணமாக விமான சேவையில் இடையூறு ஏற்பட்டது உட்பட மேலும் சில காரணங்களால் சலுகை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40 பேருக்கு COVID-19