குவைத்துக்குள் நுழைய பல நாடுகளின் மக்கள் மீது விதிக்கப்பட்ட தடையில் இருந்து மருத்துவ ஊழியர்களை விலக்குமாறு நாட்டின் தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு அமைச்சர்கள் சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமானங்களுக்கான வழிமுறைகளை DGCA வெளியீடு..!!
அல்-ராய் அரபு ஊடகங்களின்படி, பல்வேறு தனியார் மருத்துவ மையங்களில் நர்சிங் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட பல்வேறு சிறப்புகளின் கீழ் சுமார் 223 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் எனவும், அவர்கள் வெளிநாடுகளில் சிக்கி குவைத்துக்கு திரும்ப முடியாமல் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் PCR சோதனை நடத்த கூடுதல் ஆய்வகங்கள்..!!
தனியார் துறை மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ, நர்சிங் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை வெளிநாட்டிலிருந்து திரும்ப அனுமதிப்பதன் மூலம் அவர்களை அனுமதிக்க ஒப்புதல் அளிக்குமாறு அமைச்சர்கள் சபைக்கு கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது, 31 நாடுகளில் இருந்து மக்கள் குவைத்துக்குள் நுழைவதை அனுமதிப்பதை அமைச்சர் சபை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தில் குழந்தை விசாவை அம்மாவின் ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாற்றுவதற்கு தடை..!!
இதற்கிடையில், உள்ளூர் ஊடகங்கள், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி, தற்போது 31 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எந்தவொரு தொழிலுக்கும் விதிவிலக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.12
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms