லெபனானில் நடந்த கொடிய பெய்ரூட் துறைமுக குண்டுவெடிப்பு குறித்து குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல் சபா அவர்கள் லெபனான் நாட்டைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் ஹமாத் ஹாசனுக்கு தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தடைசெய்யப்பட்ட 31 நாடுகளில் இருந்து குவைத் திரும்புவதற்கான பயண தொகுப்புகள்..!!
மேலும், அழைப்பின் போது, ஷேக் பாஸல் தனது உயர்நிலை துணை அமீர் மற்றும் மகுட இளவரசர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவுகளின் அடிப்படையில், லெபனானில் உள்ள சகோதரர்களுடன் குவைத் ஒற்றுமையின் அடிப்படையில், மிகப்பெரிய வெடிப்பின் விளைவுகளை எதிர்கொண்டு அதன் விளைவுகளை சமாளிக்கவும் குவைத் அவசர மருத்துவ உதவியை வழங்கும் என்பதை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்தில் COVID-19 சோதனை மாதிரிகளை சேகரிக்கும் போலி குழு; ஜாக்கிரதை..!!
குவைத் அமைச்சர் லெபனானில் உள்ள தனது பிரதிநிதியை மருந்துகள் மற்றும் அவசர மருத்துவ தேவைகளின் பட்டியலை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்தில் முதல் முறையாக ஜூலை மாதத்தில் திருமணங்களை விட விவாகரத்து விகிதங்கள் அதிகமாக பதிவு..!!
குவைத்தின் இந்த உதவிக்கு, லெபனான் மந்திரி குவைத்தில் உள்ள சகோதரர்களுக்கு இந்த தாராளமான முன்முயற்சிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், குவைத் அமீர் அவர்களின் உடல்நிலை முற்றிலுமாக குணமடைய பிராத்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms