சர்வதேச பயணக் கட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள் குவைத் திரும்புவதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
மேலும் அவர்களுடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் குவைத் திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று தெரிவித்தன.
இந்தியா-குவைத் நெருங்கிய உறவுகளை உற்றுநோக்கும் பிரதமர் மோடி!
சுகாதார அமைச்சில் உள்ள அனைத்து ஊழியர்கள், செல்லுபடியாகும் அனுமதி மற்றும் நுழைவு விசாக்களை வைத்திருக்கும் அவர்களின் முதல் நிலை உறவினர்கள் குவைத் வர சிவில் ஏவியேஷன் டைரக்டரேட் ஜெனரல் (DGCA) அனுமதி அளித்துள்ளது.
அவர்களில் ஊழியர், மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோர் அடங்குவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக DGCA செய்தித் தொடர்பாளர் சாத் அல் ஒடிபி (Saad Al Oteibi) தெரிவித்தார்.
குவைத்தில் பணியாற்றி வந்த கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.