குவைத்தில் பணியாற்றி வந்த கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி!

wife killed husband
(Representational Photo)

குவைத்தில் பணியாற்றி வந்த சசிகுமார் (38) என்ற ஆடவர், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சோமநாயக்கன்பட்டி ஊராட்சி எல்லாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்.

இவருக்கும் பிரியா (28) என்ற பெண்ணுக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

கணவன் குவைத்தில் பணிபுரியும் நிலையில்.. மனைவி தற்கொலை!

குவைத்தில் பணியாற்றி வந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அதனை அடுத்து, மனைவி பிரியா செல்போனில் பலரிடம் பேசி வந்ததாகவும், இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த பிள்ளைகள் சசிகுமாரிடம், அம்மா அடிக்கடி வெளியில் சென்று வந்துள்ளதாகக் கூறியதால் ஆத்திரமடைந்துள்ளார் அவர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சசிக்குமார் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது சசிகுமார் மற்றும் குழந்தைகள் தீப்பற்றி எரிந்துள்ளனர். பின்னர், தீயை அனைத்து சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், சசிகுமார் தீக்காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி பிரியாவின் உண்மை முகம் வெளியே வந்துள்ளது. போதையில் உறங்கிக்கொண்டிருந்த கணவர் மீதும், பிள்ளைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக பிரியா ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் கூறுகையில், செல்போன் மூலம் பலருடன் தொடர்பில் இருந்ததாகவும், வெளிநாட்டில் இருந்து கணவர் வீட்டுக்கு வந்ததால் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் கொலை முயற்சியை மேற்கொண்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து, போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் விமான அட்டவணையில் மாற்றம்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter