குவைத்தின் இந்திய தூதராக HE சிபி ஜார்ஜ் அவர்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பதவியேற்க குவைத் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதர் ஜார்ஜ் உலகெங்கிலும் பல நாடுகளில் வெற்றிகரமான பதவிகளைப் பெற்ற வெளிநாட்டு சேவையில் 27 வருட அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தில் இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான திட்டத்தின் நான்காம் கட்டம் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!
குவைத்தில் தனது வேலையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அவர் சுவிட்சர்லாந்து, தி ஹோலி சீ மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகியவற்றிற்கான இந்திய தூதராக இருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் முன்னர் சவுதி அரேபியா மற்றும் ஈரானில் துணைத் தலைவராக பணியாற்றினார், மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சில் கிழக்கு-ஆசியா பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும், புதுதில்லியில் நடந்த இந்தோ-ஆப்பிரிக்கா மன்ற உச்சி மாநாட்டிலும் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிங்க : குவைத்தில் 60 வயதடைந்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்கள் கவனத்திற்கு..!!
இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பாலாவின் போடிமட்டம் குடும்பத்தைச் சேர்ந்தவர், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்காக தங்கப்பதக்கம் வென்ற இவர் கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க : குவைத்திலிருந்து தமிழகம் வரவிற்கும் விமானங்களின் அட்டவனை வெளியீடு..!!
தூதர் ஜார்ஜ் குவைத்தில் சவாலான நேரங்களை எதிர்கொள்கிறார், தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாள்வதில் அவர் ஒரு புதிய கண்ணோட்டத்தை கொண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms