குவைத்தின் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களின் உடல்நலம் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டு வருகிறது என்று பிரதமர் ஷேக் சபா கலீத் அல்-ஹமாத் அல்-சபா அவர்கள் நேற்றைய (ஆகஸ்ட் 3) தினம் திங்கட்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 31 நாடுகளுக்கு தடை விதித்ததன் எதிரொலி; குவைத் கல்வி அமைச்சகத்திற்கு புதிய நெருக்கடி..!!
அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் போது, அமீரின் உடல்நிலை குறித்து, துணை பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரவை விவகார அமைச்சர் அனஸ் அல்-சலேஹ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்தில் வணிக விமானங்களின் சேவை தொடங்கிய முதல் நாளே 10,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ரத்து..!!
அவரது உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் அமீர் அவர்கள் நன்றி தெரிவித்ததாக கூறினார், மேலும் அவர் சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும், அமீரின் நல்வாழ்வை ஆசீர்வதிக்கவும், எதிர்காலத்தில் அவர் தனது நாட்டுக்கு பாதுகாப்பாக திரும்பவும் பிராத்தனை செய்வதாக அல் சலேஹ் தெரிவித்தார்.
இதையும் படிங்க : உலகளாவிய கொரோனா வைரஸின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் புதுப்பிக்கப்படும்..!!
மேலும், சவூதி மன்னர் சல்மான் பின் அப்துலஜிஸ் அவர்களுக்கு முடிந்துள்ள வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு வாழ்த்தியதாகவும், அவருக்கு நீடித்த நல்வாழ்வை வாழ்த்துவதாகவும் அல் சலேஹ் அவர்கள் தெரிவித்தார்.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms