குவைத்தில் மீண்டும் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தவுள்ளதாக வெளிவந்த செய்தி உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள கடந்த காலகட்டத்தில் விதிக்கப்பட்ட பகுதி ஊரடங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதில் உண்மை இல்லை என்று சுகாதார அமைச்சர் Dr. பசில் அல் சபா அவர்கள் தெரிவித்தார்.
இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!
உள்ளூர் ஊடகங்களின்படி, இதுபோன்ற செய்தி எதும் உண்மையில்லை என்று கூறி அமைச்சர் அவர்கள் மறுத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Covid-19 வழக்குகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 900 ஆக உயர்ந்துள்ளதால் குவைத் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தக்கூடும் என்று முன்னதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!
இருப்பினும், ஆதாரங்களை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகங்கள் வைரஸ் பாதிப்பிற்கும் கடைகள், சந்தைகள் மற்றும் பிற நடவடிக்கைகளை மீண்டும் திறப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முதன்மைக் காரணம் சமூக இடைவெளி பின்பற்ற தவறியது, அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் கூட்டங்கள் கூடுதல் உட்பட பல கரணங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms