குவைத் துணை பிரதமரும், உள்துறை அமைச்சரும், அமைச்சரவை விவகார அமைச்சருமான அனஸ் அல்-சலேஹ் அவர்கள், இன்று (ஆகஸ்ட் 26), புதன்கிழமை, “59/2020” என்ற மந்திரி முடிவு எண் ஒன்றை வெளியிட்டார்.
இந்த முடிவில் ஆகஸ்டின் இறுதியில் காலாவதியாகும் விசா மற்றும் குடியிருப்புக்கு 3 மாத காலம் நீட்டிப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுருந்தது.
அதாவது நீட்டிப்பு செப்டம்பர், 1 முதல் தொடங்கி நவம்பர் 30 ஆம் தேதியுடன் காலாவதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!
இந்த முடிவு குவைத்துக்குள் இருப்பவர்களுக்கு மட்டும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், காலாவதியான குடியிருப்புடன் குவைத்துக்குள் இருக்கும் வெளிநாட்டவர்கள் அல்லது காலாவதியான அனைத்து வகையான விசாவிலும் உள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அனைத்து ஸ்பான்சர்களையும் முதலாளிகளையும் தங்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட வெளிநாட்டினரின் நிபந்தனைகளைத் திருத்துவதற்கும், குடியிருப்புகளை விரைவாக புதுப்பிப்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!
மேலும், இது ஆன்லைன் அமைப்பு மூலமாகவோ அல்லது ஆளுநர்களில் உள்ள குடியிருப்பு விவகாரங்கள் துறைகளிடமிருந்தோ செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30/11/2020 அன்று மந்திரி காலக்கெடு முடிவடைவதற்கு முன்னர், அனைத்து மக்களும் தங்கள் பயண நடைமுறைகளை ஒழுங்கமைக்கவும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.
இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms