குவைத் ஒரு மாத காலத்திற்கு சில வருகை விசாக்களை நீட்டிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வருகையாளர்கள் வெளியேற சலுகை காலம் இந்த வார தொடக்கத்தில் முடிவடைந்ததை அடுத்து இது வந்துள்ளதாக ஒரு உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சுமார் 33 லட்சம் பேர் திரும்பியுள்ளனர்!
வருகை விசா (visit visa) வைத்திருப்பவர்களிடையே சிலர் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில் முடிவடைந்த காலக்கெடுவிற்க்குள் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை.
இதன் காரணமாக அந்த வருகையாளர்களுக்கு ஒரு மாத காலம் விசாக்களை நீட்டிப்பு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 5,000 வெளிநாட்டினர், வருகை விசாக்கள் காலாவதியான போதிலும் குவைத்தை விட்டு வெளியேறவில்லை என்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
வீட்டுப் பணியாளர்கள் குவைத் திரும்ப அனுமதி – தனிமைக்கான கட்டணம் அறிவிப்பு!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.