குவைத் இந்திய தூதரகம் தொடர்ந்து இந்திய சமூகத்திடமிருந்து ஏராளமான மின்னஞ்சல் (email) செய்திகளைப் பெறுகிறது, இந்திய சமூகத்தின் அக்கறை மற்றும் ஆர்வத்தின் தூதரக பிரச்சினைகள் கவனத்திற்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட இத்தகைய மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்களை தூதரகம் பாராட்டுகிறது மற்றும் வரவேற்பதாக தெரிவித்தது.
மேலும், இந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து தீர்க்க தூதரகம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!
இதுதொடர்பாக, தூதரகத்திற்கு அனுப்பிய இதுபோன்ற மின்னஞ்சல்களை இந்தியாவிலும் குவைத் மாநிலத்திலும் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரகம் இந்த விஷயங்களை சரியான முறையில் எடுத்துக்கொள்வதற்காக, அனைவருமே தங்களது முழு பெயரையும் அவர்களின் பாஸ்போர்ட், பாஸ்போர்ட் எண்கள், சிவில் ஐடி விவரங்கள் மற்றும் தொடர்பு தொலைபேசி எண்கள் மற்றும் தபால் முகவரி ஆகியவற்றை தூதரகத்துடனான அனைத்து கடிதங்களிலும் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!
எந்தவொரு குழு அல்லது சங்கங்களின் சார்பாக மின்னஞ்சல்களையும் கடிதங்களையும் அனுப்புவோர், முடிந்தவரை, இதுபோன்ற பிரச்சினைகள் எழுப்பப்படும் நபர்களின் தொடர்பு விவரங்கள் மற்றும் முகவரியையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால், இது பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.