குவைத்திற்குள் நுழைய இந்தியா உட்பட 31 நாடுகளுக்கு தடை விதிப்பதாக குவைத் DGCA முன்னதாக அறிவித்துள்ளது.
மேலும், உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி, இந்த தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலை 10 நாட்களுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!
தடைசெய்யப்பட்டுள்ள இந்த 31 நாடுகளிலிருந்து குவைத்திற்குள் நுழைய தடைசெய்யப்படாத நாடுகளில் குறைந்தது 14 நாடுகள் வாசிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராவல் ஏஜென்சிகள் 31 தடைசெய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான தொகுப்புகளை விரைவாக உருவாக்கி, குவைத் திரும்பும் பயணத்துடன் 14 நாட்கள் தடைசெய்யப்படாத நாடுகளில் தங்க வசதிகள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!
யுனைடெட் ஸ்டேட்ஸ் ம்ற்றும் கத்தார் போன்ற நாடுகளில் 14 முதல் 17 நாட்கள் கழித்த பின்னர், கடந்த 3 நாட்களில் தடைசெய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல வெளிநாட்டு பயணிகள் குவைத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms