குவைத்தில் உள்ள சபன் பகுதியில் உள்ள குடிநீர் பாட்டில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!
மேலும், சபான், முபாரக் அல்-கபீர் , ஜிலீப் அல்-ஷுயுக் மற்றும் காப்பு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் அழைப்பிற்கு பதிலளித்து தீயை போராடி அணைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் பாட்டில் தொழிற்சாலையின் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மரத்தில்தான் தீ தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!
மேலும், இந்த தீ விபத்து சம்பவத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த காயங்களும் அல்லது உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் பாட்டில் தொழிற்சாலையின் தீ விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.