குவைத்தின் பிரதம மந்திரி ஷேக் சபா அல் கலீத் அவர்கள் குவைத் மக்களுக்கு நாட்டின் அமீர் அவர்களின் ஆரோக்கியம் சீராகவும் மற்றும் மேம்பட்டு வருவதாக உறுதியளித்தார் என்று அல்-கபாஸ் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் “அடுத்து என்ன?” என்ற நிகழிச்சியில், மனிதாபிமானப் பணிகளின் தலைவராக நாட்டின் அமீர் விருது வழங்கப்பட்ட ஆறாவது ஆண்டு விழாவையும், மனிதாபிமானப் பணிகளுக்கான மையமாக குவைத்தை தேர்வு செய்ததையும் சுட்டிக்காட்டி, பிரதமர் ஷேக் அல்-கலீத் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!
மேலும், அந்த நேர்காணலில் அமீர் அவர்களின் உடல்நிலை தற்போது ஆரோக்கியமாகவும் மற்றும் மேம்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீர் அவர்கள் விரைவாக குணமடைந்து தனது குடுபத்தினருடனும், தனது நாட்டிற்கும் திரும்ப வேண்டும் என்று இறைவனை பிராத்திக்குமாறும், தானும் பிரதிப்பதாகவும் பிரதமர் ஷேக் அல்-கலீத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!
செப்டம்பர் 9 ஆம் தேதி நடவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுவிழாவில் அமீர் சார்பாக பிரதமர் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் கூறுகையில், இந்த அன்பான சந்தர்ப்பத்தை நான் மிகவும் பெருமையுடன் நினைவில் கொள்கிறேன், மனிதநேய சேவையில் பல தசாப்தங்களாக அமீர் ஆற்றிய பங்கிற்கான உலகளாவிய பாராட்டுக்கு சாட்சியாக பங்கேற்பாளராக இருப்பதற்கான இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு அமீருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms3