குவைத்தில் பேமிலி விசாக்களில் இருப்பவர்களை தனியார் துறையில் வேலை அனுமதிக்கு மாற்றுவதைத் தடை செய்வதற்கான முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதை மனிதவள பொது ஆணையம் (PAM) உறுதிப்படுத்தியுள்ளது என்று அல் ஜரிடா தெரிவித்துள்ளது.
மேலும், இந்த முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இந்த முடிவில் குவைத் பெண்களின் கணவர்கள் மற்றும் குழந்தைகள், குடிமக்களின் மனைவிகள், பாலஸ்தீனிய ஆவணதாரர்கள், குவைத்தில் பிறந்தவர்கள், குவைத் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மற்றும் பிற வழக்குகள் போன்ற சிலருக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி தினசரி அறிக்கைகள் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!
இந்த முடிவு பல எதிர்மறை பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, வெளிநாட்டினர் குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேற வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை பல்வேறு கல்விப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட, பெற்றோர்களால் நிதியுதவி செய்யப்படும் மற்றும் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் நிலை ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!
மேலும், இதே முடிவை 60 வயது மற்றும் அதற்கு மேலான முடிவை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்றும், இது இதுவரை எந்தவொரு குழுவையும் விலக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms