குவைத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து ரேப்பிட் ரெஸ்பான்ஸ் என்ற சிறப்பு மருத்துவக் குழுவினர் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் (12.04.2020) அன்று குவைத் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பயிற்சிப் பெற்ற மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளடங்கிய 15 பேர் கொண்ட குழு குறைந்தது 2 வாரங்கள் குவைத்தில் தங்கி சேவைகளை வழங்குவார்கள் என்று முன்பு தெரிவிக்கப்பட்டுருந்தது.
தற்போது, இந்த குழு குவைத்தின் jabel al ahmed மருத்துவமனையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக குவைத் இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு ரேப்பிட் ரெஸ்பான்ஸ் சிறப்பு மருத்துவ குழுவினர் குறித்து நமது பக்கத்தில் வெளியிட்ட செய்தியின் link : https://kw.tamilmicset.com/kuwait-tamil-news/rapid-response-team-from-india-reaches-kuwait-to-combat-covid-19/