வளைகுடா மாநிலத்தில் கடந்த 2019 -ஆம் ஆண்டு டிசம்பரில் பிலிப்பைன்ஸ் தொழிலாளியான ஜீன்லின் வில்லாவெண்டே இறந்ததைச் சுற்றியுள்ள மோசமான சூழ்நிலைகளை தேசிய புலனாய்வுத் துறை (N.B.I) பிரேத பரிசோதனையில் வெளிப்படுத்தியதை அடுத்து பிலிப்பைன்ஸ் அரசாங்கம் குவைத்துக்கு செல்ல மொத்தமாக தடையை விதித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிர்வாகம் (POEA) வேலைக்காக குவைத் செல்லவிருந்த புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட தொழிலாளர்கள் என அனைவரின் வேலைவாய்ப்பு தடையை அமல்படுத்தும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை (DOLE) ஜனவரி 15, புதன்கிழமை அறிவித்துள்ளது.
வீட்டுத் தொழிலாளர்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை இந்த தடை உள்ளடக்கும் என்று DOLE தெரிவித்துள்ளது.
குவைத்தில் 26 வயதான வில்லாவெண்டேவை முதலாளிகள் அவரை அடித்து கொலை செய்வதற்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது 2018-ல் குவைத் மற்றும் பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் “தெளிவான மீறல்” என்பதால் வில்லாவெண்டேவின் மரணத்திற்கு பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
NEWS credit : Rappler.com