குவைத்தில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்துதலை 10 நாட்களாக குறைத்து அறிவித்துள்ளது சுகாதார அமைச்சகம்.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் மற்றும் தொடர்புடைய மருத்துவ குறிப்புகளின் அடிப்படையில், “COVID-19” நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது 10 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக குவைத் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளிலிருந்து அல்லது உள்நாட்டு அல்லது நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு வெளியேறலாம் என்று உள்ளூர் அரபு நாளேடான அல்-கபாஸ் தெரிவித்துள்ளது.