குவைத்தில் ஆசியாவை சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தின் ஜாபிர் அல் அஹ்மத் பகுதியில் ஆசியாவை சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!
அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டுமான வேலை நடைபெற்று வரும் வீட்டில் இருந்து தூக்கில் தொடங்கி இறந்ததாக கூறப்படுகிறது.
இவர் குவைத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் ஓட்டுநராக வேலை செய்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக குவைத்தில் தற்கொலை வழக்குகள், குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்கள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
COVID-19 கிருமித்தொற்று பரவளின் காரணமாக பலர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் வெளிநாட்டு ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.