குவைத்தில் புதிதாக இன்று முதல் சுகாதார சுத்தத்தை உயர்த்தும் நோக்கத்தோடு துப்புரவு செய்யும் முடிவை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் பொது சுகாதாரத்தின் தரத்தை உயர்த்தும் நோக்கில் குவைத் நகராட்சி அனைத்து ஆளுநர்களிலும் (Governarote) ஒரு விரிவான துப்புரவு செய்யும் முடிவை இன்று (ஆகஸ்ட் 30) ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி ஒரு வாரம் முழுவதும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!
துடைத்தல், கழிவுகள் நீக்குதல் மற்றும் குப்பைகளை அகற்றுதல், கொள்கலன்களைக் (containers) கழுவுதல் மற்றும் கருத்தடை செய்தல் போன்றவற்றை துப்புரவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தைகள் மற்றும் பொதுப் பகுதிகளில் தினசரி துப்புரவுப் பணிகளைக் கண்காணித்தல் போன்ற பல்வேறு துப்புரவு நடவடிக்கைகளை உள்ளடக்கிய தீவிர கள (filed) சுற்றுப்பயணங்களை நகராட்சி ஏற்பாடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சுற்றுப்பயணங்களின் போது பொது இடங்களில் கைவிடப்பட்ட கார்களை அகற்றுவதும் அடங்கும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இன்று முதல் குவைத் நகராட்சியின் அனைத்து ஆளுநர்களிலும் தொடங்கவுள்ள இந்த துப்புரவு பணி செப்டம்பர் ஆறாம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms