குவைத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் பகுதி ஊரடங்கு உத்தரவை விதிக்க வழிவகுக்கும் – MOH எச்சரிக்கை

Kuwait Curfew Election
Photo Credit : ArabTimes

குவைத்தில் தேசிய சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் கூட்டங்கள் வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்டங்கள் அதிகமாக கூடினால் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தின் மூத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

இது போன்ற கூட்டங்கள் கொரோனா தொற்றின் பரவலை அதிகரிக்கும் என்று அல்-கபாஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னரே அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் சுகாதார விதிமுறையான சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமுறையான மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter