குவைத்தில் சிவில் ஐடி கார்டுகளை நேரடியாக வீட்டிற்கு விநியோகம் செய்யும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
குவைத்தின் சிவில் தகவல் பொது ஆணையம் (PACI) மின்னணு சேவைகளின் வசதிகளை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த சேவையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!
இந்த செய்தியை குவைத் சிவில் தகவல் பொது ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் Musaed Al-Asousi அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
அலுவலகத்தில் கூட்டத்தை குறைக்கவும், ஊழியர்களின் வேலை நேரத்தை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முக்கியமாக கொரோனா தொற்றுலிருந்து பாதுகாக்க இந்த முடிவு உதவவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு வீட்டு விநியோகம் செய்யும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு சிவில் ஐடியை விநியோகம் செய்ய இரண்டு தினார்கள் ஆகும்.
இந்த சேவையை https: //delivery.paci. Gov.kw என்ற வலைதளத்தின் மூலம் பெறலாம்.
இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.