குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS) ரமலான் மாதம் முழுவதும் ஒரு நாளைக்கு 7,000 இப்தார் உணவை தொழிலாளர்கள் மற்றும் பல குவைத் பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
KRCS-ன் பொதுச்செயலாளர் Maha Al-Barjas அவர்கள் இன்று (25.04.2020) செய்தியாளர்களுக்கு அளித்த அறிக்கையில், Al-Mahboula, Khaitan, அல்-அமிரி மற்றும் அல்-சபா மருத்துவமனைகள், குவைத் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழிலாளர்கள், முபாரக் அல்-கபீர் ஆளுநர் பகுதி, துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம், பயன்பாட்டு கல்வி மற்றும் பயிற்சிக்கான பொது அதிகாரசபை (PAAET) மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-பர்ஜாஸ் அவர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் உதவுவதற்கு வசதியுள்ள நபர்களை நோன்பு மாதத்தில் தேவைப்படுபவர்களுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும், வெப்பமான கோடையில் வறியவர்களுக்கு உதவ முயற்சிக்கும் தன்னார்வலர்களை KRCS-ன் பொதுச்செயலாளர் Maha Al-Barjas அவர்கள் பாராட்டியுள்ளார்.