குவைத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி இயக்கத் தொடங்கும் வணிக விமானங்களில், குடியிருப்பாளர்கள் மற்றும் வளைகுடா நாட்டவர்கள் திரும்பி வரலாம் என்று உள்ளூர் அரபு செய்தித்தாளான அல் கபாஸ் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, குவைத்தில் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி பெற்ற குடியிருப்பாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமானங்கள் தொடங்கும் போது குவைத் திரும்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் COVID -19 வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கும் அங்கீகாரம் பெற்ற PCR சான்றிதழைப் பெற்றுருக்கவேண்டும் என்றும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு “Shlonik” விண்ணப்பத்தில் பதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு தனிமைப்படுத்தலில் அல்லது நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்தாலும், சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிப்பதற்கான உறுதிமொழியில் பயணிகள் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0
Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr
Twitter : https://twitter.com/kuwaittms?s=08