குவைத்தில் கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் உள்ள பகுதிநேர ஊரடங்கு உத்தரவு ரமலான் நோன்பு துவக்கம் முதல்
கூடுதலாக 3 மணிநேரத்திற்கு நீட்டிப்புச் செய்து குவைத் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு மாலை 5 முதல் காலை 6 வரையில் என்பதற்கு பதிலாக ரமலான் மாதம் முதல் மாலை 4 முதல் காலை 8 வரையில் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குவைத் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, பொதுமன்னிப்பு, ரமலான் நோன்பு ஆகிய காரணங்களால் வேலை நேரம் காலை 9:00 முதல் மதியம் 2:30 வரையில் மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.