Funaitees பகுதியில் உள்ள அதான் மருத்துவமனையிலிருந்து பெண் போலீஸ் உட்பட 6 பாதுகாப்பு வீரர்களைத் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத பெண்ணை குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) தேடிவருகிறது.
இயல்பற்ற நிலையில் தோன்றிய பெண் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தது, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முடிவெடுத்தனர்.
ஆனால், தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியதால் அந்த பெண்ணை அதான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரைத் தாக்கி அந்த பெண் தப்பிவிட்டதாக போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த பெண் மீது அரசு அதிகாரிகளை தாக்கி அவமதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
source : Arab Times