குவைத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது வரையில் மொத்தமாக 100 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் 5 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மற்றும் அவசரப்பிரிவில் 4 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.