கொரோனா வைரஸின் காரணமாக அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர்கள் சந்தித்த பெரும் இழப்புகளிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு உணவகங்கள் மற்றும் கபே (cafe) உரிமையாளர்கள் அரசாங்கத்திடமும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அல்-அன்பா (Al Anba daily) தெரிவித்துள்ளது.
அதிக விற்பனை மாதங்களில் ஒன்றாக கருதப்படும் குவைத்தின் தேசிய நாள் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் விற்பனை 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துவிட்டதன் விளைவாக திவால்நிலை அல்லது மூடல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக பல உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்னர்.
தற்போதைய நெருக்கடி இன்னும் கடுமையானதாகி, குவைத் சந்தையில் மிக முக்கியமான துறைகளில் ஒன்றைத் பாதிக்கும் முன், விரைவாக அரசாங்கங்கம் இதை சரிசெய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
மேலும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தின் வாடகையிலிருந்து விலக்கு அளிக்குமாறு ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
source : Arab Times