குவைத்தில் தனியார் ரொட்டி விற்பனையாளர்கள் முழு ஊரடங்கு உத்தரவின் போது வேலைக்கு திரும்ப அனுமதிப்பட்டுள்ளார்கள் என்று உள்ளூர் அரபு செய்தித்தாள் அல்-கபாஸ் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, தனியார் பேக்கரிகள் செயல்படும் என்றும், தங்கள் பகுதியில் உள்ள மளிகை பொருட்கள், சங்கங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு ரொட்டி மற்றும் பேக்கரி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு விநியோகத்தை (Home Delivery) மேற்கொள்ள அவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், உற்பத்தி செய்யப்படும் அளவுகள் மளிகை கடைகள் மற்றும் பிறவற்றிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் மாவு ஆலைகள் மற்றும் பேக்கரிகள் நிறுவனம் உள்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பு மூலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ரொட்டி வழங்குவதாகவும், தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.