கொரோனா வைரஸிலிருந்து மேலும் நான்கு நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் புதன்கிழமை (25.03.2020) தெரிவித்துள்ளார்.
தற்போது, குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்டோரின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது.
மீட்கப்பட்டுள்ள நபர்களில் இருவர் குவைத் குடிமக்கள் மற்றும் மற்ற இரண்டு பேர் குடியிருப்பாளர்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு நாட்களுக்குள் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்புவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.