குவைத்தில் மணிக்கு 50 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தை எட்டக்கூடிய காற்றோடு சேர்ந்து சில பகுதிகளில் இடிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை (09.04.2020) எச்சரித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய இந்த காற்று கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் விவரித்துள்ளது.
காற்றின் காரணமாக சில பகுதிகளில் தெரிவுநிலை குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் மற்றும் இந்த காற்று கடல் அலைகளை 7 அடிக்கு மேல் அதிகரிப்பதற்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.