குவைத்தில் கடந்த ஏப்ரல் 1,2020 முதல் துவங்கி ஒரு மாத காலத்திற்கு அபராதம் எதுவும் இன்றி, இலவச விமான பயணச்சீட்டு ஆகியவற்றுடன் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பை பயன்படுத்த இன்று கடைசி நாள் ஆகும்.
எனவே, குவைத்தில் உள்ளவர்கள் யாரும் Validity பாஸ்போர்ட் அல்லது தூதரகம் வழங்கியுள்ள தற்காலிக White passport வைத்திருந்தால் இன்று Farwaniya மையத்திற்கு தவறாமல் செல்வதற்கு முடிந்த அளவுக்கு முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த பொதுமன்னிப்பு நீட்டிப்பு குறித்த எந்தவொரு தகவலும் இதுவரையில் உள்துறை அமைச்சகம் அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவோ அல்லது நாளையோ இது குறித்த தெளிவான விளக்கம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.