கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க குவைத் பெண் பிளாஸ்மா தானம்..!!

kuwaiti woman donates plasma to treat those infected by coronavirus. (photo : Arab Times)

கொரோனா வைரஸ் நோயிலிருந்து குணமடைந்துள்ள குவைத்தைச் சேர்ந்த சாதிகா அல்-அன்சாரி என்ற பெண் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல் சபா அவர்களின் அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மாவைத் தானம் செய்துள்ளதாக அல்- அன்பா தினசரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை நம்பிக்கை அளிப்பதாகவும் மற்றும் பிளாஸ்மாவைத் தானம் செய்வதை ஒரு தேசிய கடமையாக கருதுவதாகவும் சாதிகா அல்-அன்சாரி தெரிவித்தார்.

அல்-அன்சாரி மேலும் கூறுகையில், அவர் மருத்துவ ரீதியாக தகுதியுள்ளவர் என்பதை உறுதிசெய்தபின் பிளாஸ்மாவை தானம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினால் மீண்டும் பிளாஸ்மா தானம் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

source : Arab Times