கொடிய கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பரப்பும் மக்கள் மீது குவைத் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
வைரஸ் குறித்து தவறான செய்திகளை பரப்பிய தனிநபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை மற்றும் தகவல் அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
உள்துறை அமைச்சரும் அமைச்சரவை விவகார அமைச்சருமான துணை பிரதமர் அனஸ் அல் சலேஹ் அவர்கள் கூறுகையில், வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
குவைத்தில் தற்போது 72 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
source : Arabian Business