குவைத் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் செய்தி நிறுவனம் கூறுகையில், குடியிருப்பாளர்கள் உணவகங்கள் மற்றும் வணிக மையங்களில் சந்திக்க அனுமதிக்கபடமாட்டார்கள் என்று கூறியுள்ளது.
கூட்டம் கூடுவதன் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை செய்திகளை பரப்புவதோடு, மசூதிகளில் நோய்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து வழிபாட்டாளர்களுக்கு இஸ்லாமிய விவகார அமைச்சகம் தெரிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
source : Gulfnews