குவைத் மேலும் மூன்று கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சம்பவங்களை சனிக்கிழமை இன்று (மார்ச் 7) உறுதிசெய்துள்ளது.
இதன் மூலம் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பதாக அமைச்சம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த சம்பவங்கள் அனைத்தும் சமீபத்தில் ஈரானில் இருந்து திரும்பியதாகவும் அமைச்சம் குறிப்பிட்டுள்ளது.
Source : Khaleej Times