குவைத்தில் உள்ள வானிலை ஆய்வாளரான முஹம்மது கரம் அவர்கள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிபார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெப்பநிலையானது வாரத்தின் இறுதியில் 40 டிகிரிக்கு கீழே குறையும் என்று எதிர்க்கபார்க்கப்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!
குவைத்தில் வரவிற்கும் நாட்களில் கரு மேகங்கள் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மழைக்காலம் தொடங்கும் என்றும், ஆனால் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த காலங்களில், மழைக்காலம் நவம்பர் மாதம் துவக்கத்தில் அல்லது அக்டோபர் மாதத்தின் இறுதியில் தொடங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!
இந்தாண்டு 130 முதல் 150 மி.மீ வரை மழை இருக்கலாம் என்பதாகவும் வானிலை ஆய்வாளரான முஹம்மது கரம் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.