குவைத் நாட்டின் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் (29-09-2020) காலமானார்.
குவைத் அமீர் உயிரிழந்ததை தொடர்ந்து, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் மிகுந்த சோகத்துடன் தன்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!
இந்நிலையில், மறைந்த குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களின் இறுதி பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் குவைத் நாட்டிற்கு நேற்று (30-09-2020) பயணம் மேற்கொண்டார்.
குவைத் விமான நிலையத்திற்கு வந்த கத்தார் அமீரை, குவைத் அமிரி திவானின் ஆலோசகர் ஷேக் முகமது அல் காலித் ஹமாத் அல் சபா, குவைத்தின் கத்தார் தூதர் HE Bandar bin Mohammed Al Attiyah மற்றும் கத்தார் தூதரக ஊழியர்கள் வரவேற்றனர்.
HH the Amir participates in the funeral prayer on the body of HH Sheikh Sabah Al-Ahmad Al-Jaber Al-Sabah at Bilal bin Rabah Mosque in Kuwait. #QNA pic.twitter.com/MhGGsghBee
— Qatar News Agency (@QNAEnglish) September 30, 2020
இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!
கத்தார் அமீரின் தனிப்பட்ட பிரதிநிதி HH Sheikh Jassim bin Hamad Al-Thani மற்றும் ஷேக்குகள், அமைச்சர்கள் ஆகியோரும் கத்தார் அமீருடன் குவைத் நாட்டிற்கு சென்றனர்.
குவைத் நாட்டில் நேற்று பிற்பகல் நடைபெற்ற அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களின் இறுதி பிரார்த்தனையில் பங்கேற்ற பின், கத்தார் அமீர் நாடு திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.