குவைத்தில் வசிக்கின்ற குடும்பங்களுக்கு வீட்டு வேலைக்காரர்கள் இருந்த நிலையில், தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள குடும்பங்கள் இனி வீட்டு தொழிலாளர்களை கொண்டிருப்பது ஆடம்பரமல்ல அத்தியாவசியமாக இருந்துவந்துள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!
ஏனென்றால், வீட்டு தொழிலாளர்கள் குழந்தைகளை பராமரிப்பது பார்த்துக்கொள்வது மட்டுமல்லாமல் பெற்றோரின் தேவைகளையும் செய்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்றால் வீடுகளுக்கு உள்நாட்டு உதவியாளர்களைக் கண்டரிவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுமுறை காலத்தில் தங்களது சொந்த நாடுகளுக்கு சென்ற வீட்டு தொழிலாளர்கள் கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக மீண்டும் வரமுடியாததால் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் புகாரளிதுள்ளது என்று அரபிக் தினசரி செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!
குவைத்தின் உள்ள குடும்பங்களை சீராக நடத்துவதற்கு பணிப்பெண்கள் ஒருங்கிணைந்து இருப்பதும் மற்றும் அவர்களுடைய குழந்தைகளை சுத்தம் செய்வது, குழந்தைகளிடம் அன்பு காட்டுகிறார்கள், வயதான பெற்றோருடன் மருத்துவமனைக்குச் செல்வது, குறிப்பாக நோய்வாய்ப்பட்ட வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வது, வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற வேலைகளும் செய்கின்றனர்.
மேலும், வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் ஓட்டுநர்கள் குவைத்தின் அடித்தளமாக கருதுகின்றனர் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.