கொரோனா வைரஸுக்கு விரைவான பரிசோதனை சாதனத்தை வழங்கிய உலகின் முதல் நாடுகளில் குவைத் ஒன்றாகும் என்று மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு விவகாரங்களுக்கான சுகாதார அமைச்சகத்தின் உதவி துணை செயலாளர் Dr.அப்துல்லா அல் பத்ர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உலகத்தை ஆக்கிரமித்த கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்பட 3 மாதங்களுக்கு முன்பு குவைத் தொடங்கியது, இது உலகின் அனைத்து நாடுகளிலும் மிக விரைவாக பரவியது.
மேலும், உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் ஸ்கேன் செய்ய 4 அல்லது 5 மணி நேரத்திற்கு மேல் தேவைப்படுகிறது, ஆனால் குவைத்தில் பயன்படுத்தப்படும் புதிய ஸ்கேன் சாதனங்களுக்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனம் பரிசோதனைக்கு இரத்த மாதிரியை எடுத்து, 10 நிமிடங்களுக்குள் அந்த நபருக்கு வைரஸ் தொற்று இருப்பதை நிரூபிக்கும் என தெரிவித்துள்ளனர்.
source : Arab Times