குவைத் சுகாதாரத்துறை அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் தன்னுடைய துறை சார்ந்த மருத்துவ ஊழியர்களுக்கு தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பதிவில், எனது சக ஊழியர்கள் அனைவரும் நான் நம்பமுடியாத தியாகங்களைச் செய்திருக்கிறீர்கள், உங்கள் குடும்பங்களை விட்டு வெளியேறி, இந்த நேரத்தில் கடினமாக உழைத்து, தியாகத்தின் உண்மையான அர்த்தத்தை எங்களுக்குக் காட்டியுள்ளீர்கள்.
மேலும், எங்கள் ஆரோக்கியத்திற்கும் செழிப்புக்கும் உயிர் கொடுத்து நீங்கள் அனைவரும் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறீர்கள், உங்கள் அனைவர்க்கும் “நன்றி” என்று பதிவிட்டுருந்தார்.
இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் இந்த செய்தியை அவர் பதிவிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.