குவைத்தின் ஜஹ்ரா கவர்னரேட் தீயணைப்புத் துறையின் இயக்குநர் ஜெனரல் Brig. Gen. Omar E. Al-Marshoud அவர்கள் பெற்றோர்களுக்கு ஸ்மோக் டிடெக்டர் மற்றும் தீயை அணைக்கும் கருவிகளை வீட்டில் நிறுவுமாறு அறிவுறுத்தினார்.
தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும், பாதுகாப்பாக தீயணைப்பு சாதனங்களைப் பயன்படுத்துவது பற்றியும் அவர் தெரிவித்தார்.
மேலும், அசல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
குவைத்தில் கோடை காலம் உச்சத்தில் இருப்பதால் சமீப காலமாக குவைத்தில் பல தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms