அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தின் திட்டங்கள் பிரிவில் உள்ள இந்தியவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை குவைத் தேசிய பெட்ரோலிய நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்தியவைச் சேர்ந்த ஊழியர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாக வட்டாரங்கள் அல் ராயிடம் தெரிவித்துள்ளன.
மேலும், அங்கு 42 பேர் சுகாதார நடைமுறைகளின்படி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.