COVID-19; குவைத்தில் சிகிச்சையிலிருந்த பிலிப்பைன்ஸ் செவிலியர் மற்றும் இந்தியர் மரணம்..!!

Indian and Phillipines nurse died in kuwait.

குவைத்தில் கொரோனா சிகிச்சையிலிருந்த இந்தியர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த செவிலியர் பெண்மணி ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்துள்ள இந்தியர், கேரளா மாநிலம் கோழிக்கோடு மங்காவு பகுதியைச் சேர்ந்த மஹரூப் (43), இவர் Jaber மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கியதில் அபத்தமான நிலையில் இருந்த இவர் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சையிலிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த செவிலியர் பெண்மணி மாரடைப்பு ஏற்பட்டு திடிரென மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள புற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்தில் தலைமை செவிலியராக வேலை செய்து வந்தவர் மானுவல் பிராவோ (54), இவர் Sabah மருத்துவமனையில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவந்த பிறகு, இவர்கள் இருவரும் வைரஸால் மரணித்துள்ளார்களா என்பது தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.