COVID-19; குவைத்தில் 4 பேர் மரணம் மற்றும் புதிதாக 278 பேர் பாதிப்பு..!!

குவைத்தில் கடந்த 24 மணி (25.04.2020) நேரத்தில் மேலும் 278 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,892ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத்தை சேர்ந்த 74 வயதுடையவரும், எகிப்தை சேர்ந்த 45 வயதுடையவரும், பங்களாதேஷை சேர்ந்த 64 வயதுடையவரும், இந்தியாவை சேர்ந்த 59 வயதுடையவரும் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை, குவைத்தில் மொத்தமாக 656 பேர் குணமாகியுள்ளதாகவும் மற்ற 2,217 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் மற்றும் 19 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.