COVID-19; குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணம் மற்றும் புதிதாக 164 பேர் பாதிப்பு..!!

COVID-19; new 164 cases detected in kuwait.

குவைத்தில் கடந்த 24 மணி (19.04.2020) நேரத்தில் மேலும் 164 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,915ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை சேர்த்த 60 வயதுடைய ஒருவர் கொரோனா வைரஸால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை 305 பேர் குணமாகியுள்ளதாகவும் மற்ற 1,603 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் மற்றும் 7 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.