குவைத்தில் இந்தியாவை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரின் சடலம் Mahboula பகுதியின் ஒரு தெருவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியிருப்பாளரின் மரணம் தொடர்பாக குற்றச் செயலின் சந்தேகம் நிலவுவதாகவும், உடலை தடயவியல் மருத்துவத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தகவலின் படி, பாதுகாப்பு வட்டாரங்கள் எந்தவொரு குற்றவியல் கோணமும் இல்லை என்று தெரிவித்துள்ளன, இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகு மேலும் தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.