வெளிநாட்டில் இருக்கும் குவைத் நாட்டினரை குவைத் திரும்புமாறு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸின் அபாயங்களைத் தவிர்ப்பதற்கும், வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதற்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைத் தடுப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப குவைத் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி அமைச்சரவை கேட்டுக்கொண்டது.
புதிதாக தற்போது 17 நபர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து குவைத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
source : Arab Times